ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை டைரக்டர் பாலா இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அதே கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் படம் இயக்குகிறேன் என கிளம்ப இருவருக்குள்ளும் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை சில பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
பாலா, தற்போது ஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தின் ரீமேக்கை தமிழில், வர்மா என்ற பெயரில் இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார். வர்மா படத்தை இயக்கிய பிறகு அதாவது, 2018ம் ஜூன் மாதத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை கதையை பாலா படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா என பலரை வைத்து பாலா ஒரு படம் பண்ணப்போவதாக தகவல் வெளியானது. இது குற்றப்பரம்பரை கதையாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தற்போது விக்ரம் வேதா படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் பாலா இயக்கும் படத்தில் இடம் பிடித்துள்ளார். இவர், ராணாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.