ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்துள்ள களவாடிய பொழுதுகள் படம், தற்போது வெளிவந்துள்ளது. காதல் மன்னன், ரோஜாவனம், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, தமிழ், ஜே ஜே, ஆட்டோகிராப், ஐயா உள்ளிட்ட பல படங்ளில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பரத்வாஜ் ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
அதற்காக அவர் சும்மா இருந்து விடவில்லை. 1330 திருக்குறளுக்கும் இசையமைக்கும் வேலையை செய்து வருகிறார் 1000-க்கும் மேற்பட்டவர்களது குரலில் இது உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இதை வருகிற ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பரத்வாஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி உலகம் முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஞாபகம் வருதே : பரத்வாஜ் 25 என்ற தலைப்பில் இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். உலகின் முக்கிய நாடுகளில் தான் இசை அமைத்த பாடல்களை மக்கள் முன் பாட இருக்கிறார். பரத்வாஜ் ஒரு இசைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.