பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குநர் பிஎஸ்.மித்ரன் இயக்க, விஷால் தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது விஷால் பேசியதாவது....
என் தயாரிப்பில் தொடங்கி தாமதமாக வெளியாகும் படம் இரும்புத்திரை. ஏப்ரல் 14-ல் முதலில் வெளியிட முடிவு செய்தோம். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் படம் தாமதமானது. ஆர்கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்தபோது வேண்டாம் என தடுத்தவர்களில் மித்ரனும் ஒருவர். ஏனென்றால் படம் தாமதமாகிவிடும் என்று பயந்தார். அவரின் வேண்டுகோள் நிறைவேறிவிட்டது.
நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் சுயநலவாதியாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த தொழில்துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தாலும், சோறு போட்ட இந்த சினிமா துறைக்கு நல்லது செய்யவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் களமிறங்கினோம். நிறைய சர்ச்சை இருந்தாலும் சொன்ன விஷயத்தை செய்து வருகிறோம். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும், அதற்கான நேரம் நெருங்கிவிட்டது.
மித்ரன் இந்த கதையை என்னிடம் கூறும்போது எனக்கு சரியாக இருக்குமா என்று தோன்றியது. ஆனால், துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.