ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரைப்படங்களுக்கு கேரள அரசு ஆண்டு தோறும் விருது வழங்கி வந்தாலும், கலைத்துறைக்கு வழங்கப்படும் ஹரிவராசனம் விருது மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இது ஆண்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். கே.ஜே.யேசுதாஸ்,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன், எம்.ஜி.ஸ்ரீகுமார் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள்.
2017ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு பாடகி சித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனை கேரள அரசு நேற்று அறிவித்தது. மாநில தேவஸ்சம் (அறநிலையத்துறை ) அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறவித்தார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு ஆகியவை வருகிற ஜனவரி 14ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். சபரிமலை உயர்மட்ட குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஸ்ரீஜெகன் சித்ராவை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளார்.
கிருஷ்ணன் நாயர் சந்தானகுமாரி சித்ரா என்று அழைக்கப்படும் சின்னக்குயில் சித்ரா, கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான 6 தேசிய விருதுகளையும், 35 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சித்ராவின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு வைர கல்லாக ஹரிவராசனம் விருது அமைகிறது.