ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியல் களத்தில் டுவீட் புரட்சி செய்து வந்த கமல், சில வாரங்களாக அமைதியாக இருக்கிறார். காரணம்... அவரது இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம்-2 படத்தின் ஒலிச்சேர்க்கை பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதுதான். சில வாரங்களாக அங்கே முகாமிட்டு விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா நடிப்பில் 2013ஆம் ஆண்டு ரிலீஸான படம் 'விஸ்வரூபம். முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்ஹாசன். எனவே, உடனடியாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிக்கும், கமலுக்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது.
ஆஸ்கர் ரவி கொடுத்த பணத்தை செட்டில் பண்ணிவிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தை தானே தயாரிக்கும் முடிவில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்தார். தற்போது ஆஸ்கர் ரவி விஸ்வரூபம்-2 படத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு தான், தயாரிப்பு - கமல் சந்திரஹாசன் என்ற டைட்டில் கார்டு பின்னணியில் அமெரிக்க கலைஞர்களுடன் போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளாராம் கமல்.
ஆக அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்...!