தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டி அடிக்கடி போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாரே தவிர, அரசியல்வாதி கேரக்டரில் நடித்து நீண்ட நாட்களாகிறது. கடைசியாக அவர் அரசியல் கதைகளில் நடித்தார் என்றால் அது தமிழில் ஆர்.கே.செல்வமணியின் டைரக்சனில் உருவான 'மக்கள் ஆட்சி' மற்றும் 'அரசியல்' ஆகிய படங்களில் தான். இதில் மக்கள் ஆட்சி படத்தில் முதலமைச்சராக நடித்திருந்தார் மம்முட்டி.
அதேபோல 1991ல் மலையாளத்தில் 'நியாயம் வெக்தமாகுன்னு' என்கிற படத்திலும் முதலைமச்சராக நடித்துள்ளார் மம்முட்டி. இந்தநிலையில் கிட்டத்தட்ட 22 வருடம் கழித்து அடுத்தததாக அரசியலை மையப்படுத்தி, அவர் நடிக்க இருக்கும் படத்தில் மீண்டும் முதலமைச்சராக நடிக்கும் யோகும் மம்முட்டியை தேடி வந்துள்ளது. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.