தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2வது நாளாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து, போட்டோ எடுத்து வருகிறார். இன்று திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
இரண்டாவது நாளாக ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரும்ப திரும்ப சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். முதலில் குடும்பம் தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், அவர்களை படிக்க வையுங்கள். நம்முடைய சொத்தே அவர்கள் தான். ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கும் பார்க்கலாம் என்றார்.
முன்னதாக ராகவேந்திரா மண்டபம் புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது பேசிய அவர், அரசியல் நிலைப்பாடு குறித்து அறிய நான்கு நாட்கள் காத்திருங்கள் என்றார்.