பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்நாட்டின் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மும்பையைச் சேர்ந்த பட நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க உள்ளது. படத்திற்கு 'தாய் - புரட்சித் தலைவி' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளார்களாம். இப்படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக ஆராய்ச்சி செய்து பல தகவல்களைத் திரட்டியுள்ளார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அவரிடம் இது பற்றிய தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி பிறகு பேசலாம் என அவர் தெரிவித்ததாக படத்தைத் தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் ஆதித்ய பரத்வாஜ் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் படமாக உள்ளதாம். ஜெயலலிதாவின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையைப் பற்றிய பகுதிகள் சென்னையில் படமாக்கப் போகிறார்களாம்.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றியும் மற்ற விவரங்களையும் விரைவில் அறிவிக்க உள்ளார்கள். 2018 ஜனவரி மாதக் கடைசியில் 'தாய் - புரட்சித் தலைவி' படம் ஆரம்பமாக உள்ளது.