‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன். நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது தனது மனைவி கஜோல் நடிப்பில் ஒரு படத்தை தயாரிப்பவர், முதன்முறையாக மராத்தி சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு ஆப்லா மனுஷ் என்று பெயரிட்டுள்ளனர். நானா பட்டேகர், சுமீத் ராகவன் முதன்மை ரோலில் நடிக்க, சதீஷ் ராஜ்வாடே இயக்குகிறார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறுகையில், சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். நான் பிறந்ததில் இருந்து மஹாராஷ்ட்டிரா மாநிலத்துடன் தொடர்பில் உள்ளேன். மராத்தி மொழி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கஜோலை திருமணம் செய்த பின்னர் அந்த மொழியின் மீது மேலும் ஈர்ப்பு அதிகமாகிவிட்டது. மராத்தி சினிமாவிற்கு என்று ஒரு தனி வழி உள்ளது. இதில் நானும், ஆப்லா மனுஷ் படம் மூலம் இணைகிறேன் என்று கூறியுள்ளார்.