இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
நடிகர் ரஜினிகாந்த், இரண்டாம் கட்டமாக இன்று முதல் தனது ரசிகர்களை சந்திக்க தொடங்கியுள்ளார். முதல்நாள் சந்திப்பின்போது ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன்...
ரஜினியிடம் அரசியல் பற்றி இதுவரை நான் பேசியது இல்லை. அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை அறிய நானும் காத்திருக்கிறேன். ரஜினியின் வளர்ச்சிக்கு காரணம் அவருடைய நிதானம் தான். 42 ஆண்டுகால பொறுமை அவரை உயர்வான இடத்துக்கு எடுத்து செல்ல போகிறது. யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்பு அவரிடம் உள்ளது.
ரஜினியை உடனடியாக அரசியலுக்கு வரச்சொல்லி நெருக்கடி கொடுக்க வேண்டாம். ஒரு நல்ல தலைவனுக்குரிய அனைத்து அம்சங்களும் அவரிடத்தில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தலைமை என்று யாராவது இருக்கிறார்களா...? ரஜினியின் நிதானத்தை ரசிகர்களும் ஏற்று, அவர் பேச்சை கேட்டு கடமையாற்ற வேண்டும் என்றார்.