பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விமல் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா. விமலுடன் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரேபோ சங்கர், யோகி பாபு, ரித்திகா, நீலிமா ராணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பூபதி பாண்டியன் இயக்குகியுள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் இப்போது வெளியீட்டுக்கு தயாராகி விட்டது, ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. இது இரண்டு கிராமத்துக்கு இடையிலான மோதல் கதை. அந்த மோதலுக்குள் காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்து தரப்போகிறார்கள். சுருக்கமாக சொன்னால் ஹரி பாணியிலான அரிவாள் கதை.
நேற்று வெளியிடப்பட்ட 90 விநாடி டீசரில் "மண்டையில நாலு கொத்து கொத்தியாவது அவனை பைத்தியம் பிடிச்சு அலைய வைக்கிறேன்" என்கிறான் வில்லன். "வெட்டறதா இருந்தாலும் அது என் வீட்ட அருவாளாத்தான் இருக்கணு" என்று ஹீரோ வில்லன் வீட்டு முன் நிற்கிறார். "உங்க ஊர்ல பத்து பேரு அருவா எடுத்தா எங்க ஊர்ல மொத்த பேரும் அருவா எடுப்பாங்க" என்கிறார் ஹீரோ. படத்தில் அருவா வீச்சுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.