Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் நிலைப்பாடு - டிச.,31-ல் அறிவிக்கிறேன் : ரஜினி

26 டிச, 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Rajini-will-announce-his-Political-decision-on-Dec-31

ரஜினி, இரண்டாம் கட்டமாக தனது ரசிகர்களை இன்று(டிச., 26) முதல் சந்திக்கிறார். டிச., 31-ம் தேதி வரை நடக்கும் இந்த சந்திப்பில் முதல்நாளில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தொடர்ந்து ஒக்கி புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்களிடத்தில் ரஜினி சந்தித்து பேசியதாவது...

ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. காலா படப்பிடிப்பு, அதன்பின் மழை போன்ற காரணங்களால் இந்த சந்திப்பு தாமதமானது. ஹீரோவாக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தது இல்லை, அப்படி ஒருநாளும் கனவு கண்டதில்லை.

ஜெயலலிதா பாராட்டினார்
வில்லனாக நடித்து கொண்டிருந்த என்னை, பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் கலைஞானம். பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தான் கூடுதல் சம்பளம் கேட்டேன். ஆனாலும் என்னை அவர் ஒப்பந்தம் செய்தார். நான் பெரிய ஹீரோவாக மாறிய பிறகு கலைஞானம் என்னிடம் கால்ஷீட் கேட்டதில்லை. அதேப்போன்று ரஜினி ஸ்டைல் என்பதை உருவாக்கியவர் மகேந்திரன் தான். முள்ளும் மலரும் படத்திற்கு பிறகு பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா பாராட்டினார்.

நானும் தவறு செய்துள்ளேன்
நானும் சில நேரங்களில் தவறு செய்துள்ளேன். நமக்கு பின்னால் பேசும்போது தான் மண்டையில் ஏறும். பிறந்த நாள் அன்று சொந்த ஊரில் இருக்க மாட்டேன். இந்த முறை அதிகம் பேர் வந்து ஏமாந்து சென்று விட்டனர். இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

போர் என்றால் தேர்தலா...?
அரசியல் பற்றி என்ன சொல்லப்போகிறேன் என தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் உள்ளதோ, இல்லையோ, ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். போர் வரும்போது பார்க்கலாம் என்றேன், போர் என்றால் தேர்தல் தானா என்ன?

வியூகம் முக்கியம்
அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும். அதில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால் தான் தயங்குகிறேன். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது, வியூகம் முக்கியம்.

31-ல் அறிவிப்பு
அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிக்க உள்ளேன். அதற்காக அன்று அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை. என்ன முடிவு எடுக்க போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளேன். ரசிகர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். கட்டுப்பாடு மிக முக்கியம். முதலில், குடும்பம், குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள். அவர்களை நன்றாக படிக்க வையுங்கள். எதிர்மறை எண்ணம் வேண்டாம், எப்போதும் பாசிட்டிவாக சந்தியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களின் வருகையொட்டி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in