டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் சந்தானம் கோவை, கொடிசியா சார்பில் நடத்தப்படும் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க கோவை சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசும்போது, இனி காமெடியனாக நடிக்க மாட்டேன். விரைவில் படம் இயக்குவேன் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் நடிக்க தொடங்கினேன். சுமார் 120 படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளேன். அதன்பின்னர் படம் தயாரித்தேன். தற்போது ஹீரோவோக நடிக்க தொடங்கி உள்ளேன். இனி நான் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்து உள்ளேன்.
நான் ஹீரோவாக நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது நான் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள சக்கைப்போடு போடு ராஜா என்ற படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதம் நான் ஹீரோவாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர இன்னும் 2 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன்.
சின்னத்திரை தொகுப்பாளராக, நடிகராக, தயாரிப்பாளராக என்னை நிரூபித்து விட்டேன். வாழ்க்கையில் நாம் அடுத்த கட்டத்துக்கு தொடர்ந்து முன்னேற வேண்டும். விரைவில் புதிய படம் ஒன்று இயக்க உள்ளேன். சூப்பர் ஹீரோ போன்று கதையம்சம் உள்ள இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க, நான் இயக்குவேன் என்றார் சந்தானம்.