ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஞ்சலி ஜெய்யுடன் நடித்துள்ள பலூன் படம் வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. இந்த ஆண்டுடன் அஞ்சலி சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகள் நடிப்பேன் என்கிறார் அஞ்சலி இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
ஒரு படத்தின் முழு கதயையையும் கேட்டறிந்து, பிடித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . பலூன் படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், எனக்கு பேய் படங்கள் பிடிக்கும் என்பது மட்டும் இன்றி, இப்படத்தின் கதை மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. பலூன் ஒரு திகில் படமாக இருந்தாலும், இதில் காதல் , காமெடி மற்றும் அனைந்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளது. ஜெய்யுடன் பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமாக அனுபவம். இந்த படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நான் எனது முதல் படம் நடித்து பத்து ஆண்டு காலம் நிறைவுபெற்றுள்ளது. இன்னும் பல வருடங்கள் நடித்து நடிகையாகவும், நட்சித்திரமாகவும் மேலும் உயர இன்னும் கடுமையாக உழைப்பேன். என்கிறார் அஞ்சலி.