பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில், சென்னை ரைனோஸ் அணியில் முக்கிய வீரர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த். இருவரும் கிரிக்கெட் வீரர்கள் போன்று நேர்த்தியாக விளையாடுபவர்கள். இருவரும் இணைந்து சென்னையை பலமுறை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விஷ்ணு, விக்ராந்த் இருவரும் விளையாட மாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து விஷ்ணு விஷால் தன் டுவிட்டரில், வாழ்க்கையில் சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதனால் இந்த ஆண்டு CCL-ல் விளையாட போவது இல்லை. சென்னை ரைனோஸ், சிசிஎல் ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் என்னுடைய அணியினரும் மன்னித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதேப்போல் விக்ராந்த்தும் தன் டுவிட்டரில் வாழ்க்கையில் தன்மானம் தான் முக்கியம். ஆகவே விஷ்ணுவும், நானும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். ரசிகர்கள் மன்னித்துவிடுங்கள், இது எங்களின் பரஸ்பர முடிவு என்று கூறியுள்ளார்.