‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை பெற்ற படம் அருவி. இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனை போனில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் இப்போது அருண் மற்றும் ஹீரோயின் அதிதியை நேரில் அழைத்து பாராட்டியதோடு இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அருவி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவும் உடன் இருந்தார்.
இயக்குநர் அருண் பிரபுவிடம் ரஜினிகாந்த் பேசும்போது... அருவி ரொம்ப புத்திசாலிதனமான, அருமையான படம். படத்தை பார்த்து அழுதேன், நிறைய சிரித்தேன், தனியாக படத்தை பார்க்கும்போது தியேட்டரில் உட்கார்ந்து பார்த்த உணர்வு கிடைத்தது. அருவி படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இப்படியொரு படத்தை கொடுத்தற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை மனதார பாராட்டினார்.
அதிதியிடம், உங்கள் நடிப்பு சூப்பர். உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக நீண்டநாள் சினிமாவில் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அதேப்போல் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடமும், அவரது படங்கள் குறித்து விசாரித்ததோடு அந்த படங்களையும் வாழ்த்தி இதுபோன்று இன்னும் நல்ல படங்களை தயாரியுங்கள் என்றார்.