இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
15 ஆவது சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி, 21-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்தவிழாவில் 12 தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றிலிருந்து சிறந்த தமிழ்த்திரைப்படமாக சுரேஷ் சங்கையா இயக்கிய 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் தேர்வானது.
இரண்டாவது சிந்த தமிழ் திரைப்படமாக புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' தேர்வுபெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப்கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த, 'மாநகரம்' திரைப்படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.
'அமிதாப்பச்சன் யூத் ஐகான்' விருது நடிகர் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதுடன் ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அந்த தொகையை திரைப்படவிழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரியேஷன்ஸ் அமைப்புக்கே வழங்கினார் விஜய்சேதுபதி.