டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 8 நாட்களாக நடந்து வந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 படங்கள் திரையிடப்பட்டது. தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 8 தோட்டாக்கள், மாநகரம், அறம், மகளிர் மட்டும், தரமணி, ஒரு கிடாயின் கருணை மனு, கடுகு, குரங்கு பொம்மை, மனுசங்கடா, ஒரு குப்பை கதை, விக்ரம் வேதா, துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் போட்டியிட்டன.
இதில் ஒரு கிடாயின் கருணை மனு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்தது. மாநகரம் படத்திற்கு சிறப்பு நீதிபதிகள் விருது கிடைத்தது. குரங்கு பொம்மை படத்தில் நடித்த பாரதிராஜவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறைவு விழாவில் கே.பாக்யராஜ் வழங்கினார். விஜய் சேதுபதி தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சர்வதேச திரைப்பட விழாவுக்கே வழங்கினார்.