தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா 2017 பற்றிய பிளாஷ்பேக் கருத்துகளும், பேச்சுகளும், டுவீட்டுகளும், பதிவுகளும் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இன்று 3 படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டின் கடந்த பத்து மாதங்களில் நடக்காத விஷயங்கள் கடைசி இரண்டு மாதங்களில் நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. 2017ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் வந்த சிறந்த படங்களில் 'விக்ரம் வேதா, மாநகரம், ஒரு கிடாயின் கருணை மனு,” என முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட மூன்றே மூன்று படங்கள் வெளிவந்தன.
ஆனால், கடைசி இரண்டு மாதங்களான நவம்பர் மற்றும் டிசம்பரில் இதுவரையில், “அறம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இன்று வெளியாகியுள்ள 'வேலைக்காரன்' படமும் மேலே குறிப்பிட்ட படங்கள் வரிசையில் சமூகப் பிரச்சனையை எதிரொலிக்கும் படமாக வந்துள்ளது என படம் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாதாரணமாக ஆரம்பமான 2017ம் ஆண்டு, கடைசி மாதங்களில் நிறைவான படங்களைக் கொடுத்துள்ளதால், 2018ம் ஆண்டும் இப்படி வித்தியாசமான சமூகப் பிரச்சனையுள்ள படங்கள் வெளிவரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படங்கள் அதிகம் வந்தால் தான் தமிழ் சினிமாவும் இந்திய திரையுலக அரங்கில் இன்னும் மேம்படும்.