இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடித்த அந்த படத்தில் அரவிந்த்சாமி அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன்பு வரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, முதன்முறையாக ஒரு புதிய கதையை இயக்கினார். அதையடுத்து தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுபற்றி மோகன்ராஜா கூறுகையில், தனி ஒருவனுக்கு பிறகு எந்த மாதிரி படம் பண்ணலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, சிவகார்த்திகேயன் வந்து எனக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என்றார். அதுவும் தயாரிப்பாளரோடு வந்தார். அவரிடம் மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒன்றை ஓகே செய்தார்.
இந்த கதை சமூகத்தைப்பார்த்து நான் கேட்க நினைத்த கேள்வி. அதாவது 20 வருடங்களாக நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த அந்த கேள்வியை இந்த வேலைக்காரன் படம் மூலம் சமூகத்திடம் கேட்கிறேன். இந்த படத்தில் ஒரு மெசேஜ் உள்ளது. இந்த படம் வெளியான பிறகு அனைவருமே இது கேட்க வேண்டிய கேள்விதான் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பொதுவாக, நான் எனது படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போது வேறு படங்களை பார்க்க மாட்டேன். ஆனால் நயன்தாரா விட மாட்டார் என்பதால் அவருக்காக அறம் படத்தைப்பார்த்தேன். நல்ல படம், பிரமாதமாக நடித்திருந்தார். அவருக்குள் இவ்வளவு திறமை இருந்ததினால்தான் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். அப்படியொரு நடிகை எனது வேலைக்காரனில் நடித்திருப்பது பெருமையான விசயம் என்கிறார் மோகன்ராஜா.