ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடித்த அந்த படத்தில் அரவிந்த்சாமி அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன்பு வரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, முதன்முறையாக ஒரு புதிய கதையை இயக்கினார். அதையடுத்து தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுபற்றி மோகன்ராஜா கூறுகையில், தனி ஒருவனுக்கு பிறகு எந்த மாதிரி படம் பண்ணலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, சிவகார்த்திகேயன் வந்து எனக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என்றார். அதுவும் தயாரிப்பாளரோடு வந்தார். அவரிடம் மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒன்றை ஓகே செய்தார்.
இந்த கதை சமூகத்தைப்பார்த்து நான் கேட்க நினைத்த கேள்வி. அதாவது 20 வருடங்களாக நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த அந்த கேள்வியை இந்த வேலைக்காரன் படம் மூலம் சமூகத்திடம் கேட்கிறேன். இந்த படத்தில் ஒரு மெசேஜ் உள்ளது. இந்த படம் வெளியான பிறகு அனைவருமே இது கேட்க வேண்டிய கேள்விதான் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பொதுவாக, நான் எனது படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போது வேறு படங்களை பார்க்க மாட்டேன். ஆனால் நயன்தாரா விட மாட்டார் என்பதால் அவருக்காக அறம் படத்தைப்பார்த்தேன். நல்ல படம், பிரமாதமாக நடித்திருந்தார். அவருக்குள் இவ்வளவு திறமை இருந்ததினால்தான் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். அப்படியொரு நடிகை எனது வேலைக்காரனில் நடித்திருப்பது பெருமையான விசயம் என்கிறார் மோகன்ராஜா.