பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
தமிழில் தனுஷ் நடித்த 3 படத்திற்கு இசையமைத்து அறிமுகமான அனிருத்திற்கு அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மிகப் பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால் முதல் படத்திலேயே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அனிருத், தற்போது கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள அவரது 25-வது படமான அஞ்ஞானவாசி படத்திற்கு இசையமைத்து தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி விட்டன. அந்த வகையில் முதலில் வெளியிடப்பட்ட பைட்டி கோச்சி, காளி வாழுக ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி பவன்கல்யாண் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதையடுத்து தற்போது தாக தாக மேனே, மதுராபுரி, ஏ எவரோ ஆகிய பாடல்களும் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதையடுத்து இந்த பாடல்கள் அனைத்துமே வித்தியாசமான சவுண்டை வெளிப்படுத்துவதாக தெலுங்கு ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
இதனால் தெலுங்கில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கிடைத்த இந்த வரவேற்பினால் உற்சாகத்தில் இருக்கிறார் அனிருத். மேலும், பவன்கல்யாணின் அஞ்ஞானவாசி படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் இசையமைக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.