600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கமல்ஹாசன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிக்கும் 'விஸ்வரூபம் 2' படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பை சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தி முடித்தார்கள். அதன் பின் கமல்ஹாசன் அமெரிக்காவிற்குச் சென்று படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தினமும் 15 மணி நேரங்களுக்கும் மேலாக பணியாற்றி படத்தை நல்ல தரத்துடன் முடிக்க அவர் வேலை செய்து வருகிறார். 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாக இறுதிக் கட்டப் பணிகளையும் அவர் அமெரிக்காவில்தான் செய்து முடித்தார். அதேப்போல இரண்டாவது படத்திற்கான வேலைகளையும் அங்கேயே முடித்து வர உள்ளார்.
தற்போது ஒலிக் கலவை வேலையை கமல்ஹாசன் முடித்துள்ளார். அது பற்றி அவருடைய டுவிட்டர் பதிவில், “விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக இருக்கும். இதற்காக உழைத்துள்ள அனைத்து டெக்னீசியன்களுக்கும் நன்றி. திரையில் தயாரிப்பாளராக எனது சகோதரரின் பெயர் உள்ளது. அவர் இருந்திருந்தால் இந்த போட்டோவை அவருக்கு முதலில் அனுப்பியிருப்பேன் என்று கூறியுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
'விஸ்வரூபம் 2' படம் ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது