கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பிரேமம் படத்தில், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும், இறுதிச் சுற்று படத்தில், மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்து உள்ளதோ, அதேபோன்ற வரவேற்பு, அருவி படத்தில் நடித்த, அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில், அவரது நடிப்பை பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டும், 'வாடி ராசாத்தி' என, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இந்த படத்தில், அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன், இரண்டு முன்னணி ஹீரோயின்களுக்கு, கதை சொன்னாராம் இயக்குனர். ஆனால், அவர்கள், 'இதெல்லாம் ஒரு கதையா' என்ற ரீதியில் பேச, அதிதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். இப்போது, கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர், 'கால்ஷீட்' கேட்டு, அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனர். 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என, சும்மாவா சொன்னார்கள்.