ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேமம் படத்தில், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும், இறுதிச் சுற்று படத்தில், மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்து உள்ளதோ, அதேபோன்ற வரவேற்பு, அருவி படத்தில் நடித்த, அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில், அவரது நடிப்பை பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டும், 'வாடி ராசாத்தி' என, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இந்த படத்தில், அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன், இரண்டு முன்னணி ஹீரோயின்களுக்கு, கதை சொன்னாராம் இயக்குனர். ஆனால், அவர்கள், 'இதெல்லாம் ஒரு கதையா' என்ற ரீதியில் பேச, அதிதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். இப்போது, கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர், 'கால்ஷீட்' கேட்டு, அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனர். 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என, சும்மாவா சொன்னார்கள்.