ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். இருவருமே விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து சந்தானம் நகைச்சுவை நடிகராகவும், சிவகார்த்திகேயன் நாயகனாகவும் வளர்ந்தார்கள்.
ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிப்பு போரடித்துப் போன சந்தானம், அவரும் சிவகார்த்திகேயனைப் போல நாயகனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
இதில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து 'சர்வர் சுந்தரம், சக்கப் போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதில் பின்னர் ஆரம்பமான 'சக்கப் போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 'வேலைக்காரன், ராஜா' இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.