'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு முதல் தெலுங்கு படம் என்றபோதும் தெலுங்கில் தனக்குத்தானே டப்பிங் பேச முயற்சித்து வருகிறார். மேலும், சாஹோ படமும் பாகுபலி போன்று மூன்று மொழிப் படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்று புதியபட வேட்டைகளிலும் ஈடுபட்டுள்ளார் ஸ்ரத்தா கபூர்.
அதோடு, அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை தொடர்ந்து வரும் ஸ்ரத்தா கபூர், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது, பிரபாஸ்-மகேஷ்பாபு குறித்து ரசிகர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு ஸ்ரத்தா பதில் கூறுகையில், பிரபாஸ் ஒரு சிறந்த மனிதர். ரொம்ப அன்பானவர். அதேப்போல் மகேஷ்பாபு மனதைக்கவரும் அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ளார்.