டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கைதி எண் 150 படத்தை அடுத்து தற்போது சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாக்களில் நடித்த சில மூத்த நகைச்சுவை நடிகர்களுக்கு தனது சார்பில் பண உதவி செய்துள்ளார் சிரஞ்சீவி. அதாவது, சீனியர் தெலுங்கு நகைச்சுவை நடிகர்களான குண்டு ஹனுமந்தராவ், போட்டி வீரா ஆகியோர் வறுமையில் வாடுவதை ஒரு டிவி பேட்டியில் அறிந்திருக்கிறார் சிரஞ்சீவி. அதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் அவர்களின் விலாசத்தை கேட்டு அறிந்து கொண்டு அவர்களுக்கு தனது சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கியிருக்கிறார்.