பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வரும் 2018ல் அறிவிக்கப்பட இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'புலி முருகன்' படத்தில் இருந்து, ஜேசுதாஸ்-சித்ரா பாடிய 'காலனையும் கால்சிலம்பே' மற்றும் வாணி ஜெயராம் பாடிய 'மானத்தே மாடக்குரும்பே' ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் 'புலி முருகன்' மட்டும் தான். இந்தப்படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் கோபிசுந்தரின் அதிரவைக்கும் பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்கு வகித்தன.
இந்தப்படத்திற்கான பாடல்களையும், பின்னணி இசையையும் கோபிசுந்தரும், இயக்குனர் வைசாக்கும் சுமார் ஒருமாத காலம் சென்னையில் தங்கி உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.