கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'பலூன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் சினிஷ், 'பலூன்' படத்தை 30, 40 ஆங்கிலப் படங்களிலிருந்து காப்பியடித்துதான் கதை எழுதினேன். இன்றைய ஆடியன்ஸ் மிகவும் ஸ்மார்ட் ஆக இருக்கிறார்கள், அவர்கள் எதையும் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். 'மௌனராகம்' படத்தை எடுத்துவிட்டு, அந்தப் படத்தையே பார்க்கவில்லை என்று பொய் சொல்லும் பழக்கம் என்னிடம் இல்லை என்று பேசியிருந்தார்.
அவர் மேலே சொன்னபடி பேசியதற்கும் விஜய் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. 'மௌனராகம்' படத்தை காப்பியடித்து 'ராஜா ராணி' படத்தைத்தான் அட்லி இயக்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 'அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம்' ஆகிய படங்களை காப்பியடித்து 'மெர்சல்' படத்தைத்தான் அட்லி இயக்கியிருந்தார் என்பதும் அனைவரும் கூறிய ஒன்றுதான்.
ஆனால், 'பலூன்' பத்திரிகையாளர் சந்திப்பில் பட இயக்குனர் சினிஷ், அட்லீ என்ற பெயரையோ, 'மெர்சல்' என்ற படத்தின் பெயரையோ சொல்லவேயில்லை. ஆனால், சிலர் அவர் பேசியதைத் திரித்துப் பேசி விஜய் ரசிகர்களை சண்டை போட தூண்டிவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து 'பலூன்' இயக்குனர் சினிஷ் டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.
அதில், “விஜய்யைப் பற்றியோ, அவருடைய படங்களைப் பற்றியோ 'பலூன்' பத்திரிகையாளர் சந்திப்பில் நான் எதுவுமே சொல்லவில்லை. இந்தப் பதிவையும் நான் பயந்துதான் போடறன்னு நினைச்சால், சோ, சாரி,” எனக் கூறியுள்ளார்.