விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த் உள்ளிட்ட பலர் சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து ஹீரோவாகியிருக்கிறார் ஜெகன். விஜய் தொலைக்காட்சியில் மனிதன் பாதி மிருகம் பாதி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஜெகன். இப்போதும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியானாக நடித்தாலும் அயன் படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு கோ, அம்புலி, பையா, மரியான், நான் சிவப்பு மனிதன், மாப்பிள்ளை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.
இதில் அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரஹானா என்ற புதுமுகம் நடிக்கிறார். பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக நடிக்கிறார். சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், முருகலிங்கம் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது காமெடி படம். கிராமத்தில் ஒரு பசுமாடு காணாமல் போகிறது. அதை அவர் போலீசில் புகார் செய்கிறார். அந்த மாட்டை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு ஹீரோவான கான்ஸ்டபிளிடம் கொடுக்கப்படுகிறது. அவர் எப்படி மாட்டை கண்டுபிடிக்கிறார். அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் முருகலிங்கம்.