ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகர் ரஜினிகாந்த் இந்த ஆண்டில் அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இரண்டாவது கட்ட புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 26ந் தேதி முதல் 31ந் தேதி வரை நடக்கிறது. கடந்த முறை சந்திப்பில் இருந்து சிறு சிறு குழப்பங்களையும் தவிர்த்து இந்த முறை பக்காவாக திட்டமிட்டு நடத்த இருக்கிறார்கள்.
முதல் கட்ட சந்திப்பில் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி, இந்த முறை மீதமுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறார். தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சந்திப்பு நடக்கும். இடையில் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவெளி விடப்படும். வருகை தரும் அத்தனை ரசிகர்களுக்கும் சந்திப்பு நடக்கும் ராகவேந்திரா மண்டபத்திலேயே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தினமும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறார்.
முதல் கட்டமாக சென்னை அருகில் உள்ள செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அதன்பிறகு தொலைதூர மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். கடைசியாக 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை கொண்டு வருகிறவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த முறை ரஜினி ரசிகர்களிடையே அரசியல் குறித்து எதுவும் பேச மாட்டார் என தெரிகிறது. தேவைப்பட்டால் ரசிகர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குவார் என்று ரஜனி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த முறை போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இந்த முறை கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.