ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரண்டிலும் பா.ஜ., பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. இதனால் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பல தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனிடையே நடிகர் பிரகாஷ் ராஜூம், மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரகாஷ் ராஜ் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...
பாசத்திற்குரிய பிரதமருக்கு, வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஆனால், இந்த வெற்றியில் உண்மையில் நீங்கள் மகிழ்ச்சி அடைக்கிறீர்களா.? ஆமாம் அந்த 150 வெற்றி என்னாச்சு என்று கேள்வி எழுப்பி உள்ளோர்.
அதோடு, பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை நீங்கள் உணருவீர்களா...?, பாகிஸ்தான், மதம், ஜாதி என சமூகத்தை அச்சுறுத்தும் சில அமைப்புகளை தாண்டி நம் நாட்டிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன, கிராமபுறங்களில் தான் அதிக பிரச்னைகள் உள்ளன. ஏழைகள் மற்றும் விவசாயிகளின் குரல் இப்போது வலுப்பெற்று வருகிறது. இது எல்லாம் உங்கள் காதுகளில் கேட்கிறதா...?
சும்மா கேட்கிறேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.