தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு வைபவ் நாயகனாக நடித்த மேயாதமான் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். இதில் பிரியாவின் நடிப்புக்கு சினிமா வட்டாரங்களில் வரவேற்பு கிடைத்தது. அதன்காரணமாக தற்போது பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு இன்னும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய், அஜித் இருவரும் தன்னை மிகவும் கவர்ந்த நடிகர்கள் என்று கூறியுள்ளார். அந்த வகையில், விஜய்யின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. அவரது நடனத்திற்காகவே அவர் படங்களை பார்ப்பேன்.
அதேபோல் அஜித் படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து அவர் நடித்த முகவரி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தில் அஜித்தின் நடிப்புக்காக பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் என்று கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.