ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2விற்கு பிறகு சுஜித் இயக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி படங்களைப்போன்றே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சில அதிரடியான சண்டை காட்சிகளை துபாய் மற்றும் அபுதாபியில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அந்த நாடுகளில் இவர்கள் கேட்ட லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதன்காரணமாக அந்த சண்டை காட்சிகளுக்கு பிறகு படமாக்கயிருந்த காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்க தயாராகி விட்டனர். அதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் சாஹோ படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.
அதன்பிறகு சண்டை காட்சிகளை படமாக்க துபாய், அபுதாபியில் அனுமதி கிடைத்ததும் அங்கு முகாமிடுகிறதாம் சாஹோ பட யூனிட்.