இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அறம் படத்தை தயாரித்த கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் குலேபகாவலி. பி.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். குலேபகாவலி பொங்கல் தினத்தில் வெளியாகிறது .
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம், படம் வெளியாக உள்ள நிலையில் பிரபுதேவாவின் குலேபகாவலி படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் வெளியீட்டைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்புகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது முடிந்துள்ளது. இதன் பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பாடல் முன்னோட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
"விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கம்மா... சிக்கல் வந்தா தள்ளியே நிண்ணுக்கமா..." என்ற அறிமுக பாடலில் பிரபுதேவா தனது பழைய பாணியில் நடனமாடியிருக்கிறார். "சேராமல் போனால் வாழாமல் போவேன்..." என்ற பாடலில் அரங்க அமைப்பும், கிராபிக்சும் மிரட்டுகிறது. இணைய தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது பாடல்கள்.