தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சங்கரின் மனைவி கவுசல்யா ஆணவக்கொலைகளுக்கு எதிராக போராடி வருகிறார். சங்கர், கவுசல்யா வாழ்க்கையை மையப்படுத்தி தான் களிறு என்ற படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதன் இயக்குனர் சி.ஜே.சத்யா கூறியதாவது:
களிறு, ஆணவக்கொலை பற்றிய படம் தான். ஆனால் இது கவுசல்யாவின் கதை அல்ல. ஆணவக்கொலையால் வாழ்க்கையை இழந்த அனைத்து பெண்களின் கதை. காதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டும், இல்லையேல் கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மற்றப்படுகின்றன. அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் “களிறு". ஆணவக் கொலைகள், காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
ஆணவக் கொலை சம்பந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் இல்லை. யதார்த்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிகளின் வழியியே கண் முன் நிறுத்தும் இப்படம். கௌரவத்திற்காக கொலை செய்கிறார்கள். அப்படி செய்த பிறகு அவர்கள் கெளரவம் திரும்ப கிடைத்துவிடுகிறதா?
அதிகாரமும், பண பலமும் இருப்பதால் தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மாறனும், மற்றப்படனும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இப்படம் என்றார்.
படத்தை சிபிஎஸ் பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. விஷ்வக் என்ற புதுமுகத்துடன் அனு கிருஷ்ணா, தீபா ஜெயன், துரை சுதாகர், நீரஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.ஜே.பாலா இசை அமைத்துள்ளார், சிபி இசை அமைத்துள்ளார்.