இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
நாகசைதன்யா-சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது சமந்தா ரங்கஸ் தலம் படத்திலும், நாகசைதன்யா ஷவ்யா சச்சி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாகசைதன்யா-சமந்தாவின் திருமணம் இந்து மட்டுமின்றி, கிறிஸ்தவ மத முறைப்படியும் நடந்தது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வரும் சமந்தா, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது புகுந்த வீட்டில் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகசைதன்யா, சமந்தா இருவரும் தங்களது சினிமா நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சமந்தாவின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டிசம்பர் 25ந்தேதியில் தொடங்கி புத்தாண்டு வரை தொடர்கிறதாம்.