டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய், அஜீத், சூர்யா என ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் முதல் நாள், ரசிகர்களுக்கு ஒரு காட்சி திரையிடுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக விஜய் நடித்த தெறி படம், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட்டது போன்று அவரது பெண் ரசிகைகளுக்கும் ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதாவது, காரைக்குடியில் உள்ள சத்யம் தியேட்டரில் காலை 7மணிக்கு ரசிகைகளுக்கான தெறி படக்காட்சி திரையிடப்பட்டது.
விஜய்யைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சிறப்பு காட்சி ரசிகர்களைப் போன்று ரசிகைகளுக்கும் ஒரு காட்சி திரையிடப்பட உள்ளது. ஆனால் அந்த காட்சி தமிழகத்தில் திரையிடப்படவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அங்குள்ள ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இந்த செய்தியை சூர்யாவின் ரசிகர்கள் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.