ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என முதன்முதலில் அரசியல் பார்வையை முன் வைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த ஜூன் மாதம் ரசிகர்களை சந்தித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.
அதன்பின்னர் நடிகர் கமலின் தீவிர அரசியல் ஈடுபாடு, ஆர்கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் திடீர் களமிறக்கம் என அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்ந்து போதும் ரஜினி மட்டும் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். சமீபத்தில் முடிந்த தனது பிறந்தநாளின் போது கூட ரசிகர்களை சந்திக்கவில்லை ரஜினி. வெறும் டுவிட்டரில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்று மட்டும் கூறினார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற டிச., 26 முதல் 31ம் தேதி வரை, அவரின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 1000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது அரசியல் குறித்து தீவிர ஆலோசனையிலும் ஈடுபட உள்ளார்.
ரசிகர்கள் உடனான சந்திப்புக்காக ரஜினி சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தமுறையாவது போரை அறிவிப்பாரா... ரஜினி...!