பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவியேற்ற பிறகு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து முன்னாள் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான விஷால் தரப்பு "வழக்கு முடியும் வரை முன்னாள் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்" என்று உறுதி அளித்தனர்.
ஆனால் உறுதிமொழிக்கு மாறாக ராதாரவி உள்ளிட்ட சில முன்னாள் நிர்வாகிகளை புதிய நிர்வாகம் நீக்கியது. இதை தொடர்ந்து விஷால் மீது ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 19ம் தேதிக்குள் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.