ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகிறது. சென்னையில் உள்ள சத்யம், தேவி, தேவிபாலா, கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர். ரஷிய கலாச்சார மையம் ஆகிய இடங்களில் படங்களை பார்க்கலாம்.
ஜெர்மன், கொரியன் உள்ளிட்ட உலக படங்கள், இந்தியன் பனோரமாவில் பங்கேற்ற படங்கள், குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக தமிழ் படங்களின் போட்டி பிரிவில் பங்கேற்கும் 12 படங்களும் திரையிடப்படுகிறது. நயன்தாரா நடித்த அறம், ஜோதிகா நடித்த மகளிர் மட்டும், ஆண்ட்ரியா நடித்த தரமணி உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி கலந்து கொண்டு பட விழாவை துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது. இந்த ஆண்டு படவிழாவுக்கு அரசு நிதி உதவி அளிக்கவில்லை என்பதும், துவக்க விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.