இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மம்முட்டி நடித்த 'கசபா' படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை பார்வதி, அந்தப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு, இந்திய சினிமாவில் உள்ள நல்ல நடிகர்களில் ஒருவரான மம்முட்டி இப்படி பேசியது தான் வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டார்.
வழக்கம்போல மம்முட்டியின் தீவிர ரசிகர்கள், சினிமாவுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசாதீர்கள் என பார்வதியின் மீது கண்டனங்களை வீச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத பார்வதி, ““வருக.. வருக.... வழக்கம்போல நான் சொன்ன விஷயத்தை விட்டு வெளியே போய், தப்பர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள்.. என்னை கேவலம் ஒரு சாதாரண நடிகை என சொல்லுங்கள்.. இப்படிக்கு நீங்கள் குறிப்பிட்ட 'மலிவான பெண்ணியவாதி'” என பதில் அளித்துள்ளார்.
இதுபோதாதென்று, நடிகை கடத்தல் விவகாரத்திற்குப்பின் மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நல அமைப்பு உறுப்பினர்களுக்கு (WCC) இன்று மம்முட்டியின் சர்ச்சைக்குரிய 'கசபா' படத்தை திரையிட்டு காட்டுகிறார்களாம்.