டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வந்த காமெடி நடிகர் விஜய் சாய். பொம்மரிலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள யூசுப்டா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கருத்து வேறுபாடால் தனது மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சாய் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்ததும் யூசுப்குடா பகுதி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது தற்கொலைக்கான காரணத்தை விஜய் சாய் செல்போன் வீடியோவில் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.