ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது பெயரில் ஆஸ்க் என்ற புதிய செயலியை (ஆப்) நேற்று தொடங்கினார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த துவக்க விழாவில், அவரது மனைவி ராதிகா சரத்குமார், இந்திய முன்னாள் நிதி துறை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆப் குறித்து சரத்குமார் கூறியதாவது:
ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கை துறை சார்ந்தவராக ஒரு அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் தலைவராக இருக்கும் நான் ஒரு செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரு இணைப்பு பாலமாக செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
என்னோடு பொதுமக்கள் தகவல் பரிமாற்றங்களை நேரிடையாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்கப்படும் களமாகவும், சமூக சீர்திருத்தத்திற்கான தளமாகவும், குடிமக்கள் எளிதில் அணுகக்கூடிய உற்ற தோழனாகவும் இச்செயலியின் செயல்பாடு அமைய உள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன, அவை எந்தெந்த வழிகளில் தீர்வு காணப்பட்டன, எத்தகைய அணுகுமுறை உபயோகப்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவரங்கள் இச்செயலியில் அடங்கி இருக்கும். என்றார்.
பின்னர் விஷால் தேர்தலில் போட்டியிட்டது பற்றி கேட்டபோது... "தேர்தலில் ஓட்டுரிமை உள்ள யாரும் போட்டியிடலாம். விஷால் போட்டியிட்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை இத்தனை பெரிதுபடுத்தியிருக்க தேவையில்லை. எம்.ஜி.ஆரின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சங்கத்தில் இப்போது ஒற்றமை குலைந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தங்கள் மேற்கொண்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.