அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் வந்து 42 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. முதல் படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்து, அடுத்த படங்களில் வில்லனாக அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வசூல் நாயகனாக மாறினார் ரஜினிகாந்த். அன்றிலிருந்து இன்று வரை ஓரிரு படங்களைத் தவிர ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் வசூல் சாதனைப் படங்கள் தான்.
70களின் கடைசியிலும், 80களின் ஆரம்பத்திலும் பல வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் அன்றைய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக மாறினார். அந்த ஈர்ப்பு தான் அப்படியே மாறி மாறி அவரை சூப்பர் ஸ்டார் ஆக உருமாற்றியிருக்கிறது. வேறு யாரையும் அந்தப் படத்திற்கு நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்பது தான் உண்மை.
காலம் மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை அது காலா வரையிலும் மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதன் பின்னரும் தொடரத்தான் போகிறது. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் சாத்தியம் ரஜினியிடம் இருக்கிறது. அவரை ராகவேந்திரர் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, எந்திரன் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, கபாலி ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
சினிமாவுக்கு என்று இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழையவும், அப்படி நுழைந்தவர்களும் தங்களை சூப்பர் ஸ்டார்கள் ஆன நினைத்துக் கொள்வதற்கும் அப்போதை பாதை போட்டுத் தந்தவர் ரஜினிகாந்த்.
ரசிகர்களும், திரையுலகமும் கொண்டாடும் ரஜினிகாந்த், இன்றைய அவருடைய பிறந்த நாளில், அரசியல் பிரவேச அறிவிப்பையோ, அல்லது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்பு ஒன்றையோ வெளியிடுவாரா என மீடியா உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.