தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்து முடித்ததற்குப் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே ரஜினிகாந்தின் மருமகனும், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், 'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின் அப்படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்து படத்தின் முதல் பார்வையையும் மே 25ம் தேதியன்று வெளியிட்டார்கள்.
தொடர்ந்து மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. படத்தை முதலில் 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக வேண்டிய '2.0' படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அப்படத்தின் வெளியீட்டை கோடை விடுமுறைக்குத் தள்ளி வைத்தனர்.
கடந்த சில வாரங்களாகவே ரஜினிகாந்த், அடுத்தடுத்து நடித்து முடித்துள்ள '2.0, காலா' ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்று பேச்சு இருந்தது. அதோடு, 'காலா' படத்தை '2.0' படத்தைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.
இதனிடையே, பத்து நாட்களுக்கு முன்பாக '2.0' படம் ஏப்ரல் வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 'காலா' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு 'காலா' படக்குழுவினர் இரண்டாவது பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் 'காலா' படத்தை அந்நிறுவனம் வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.