பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தேவையில்லாமல் முகநூலில் வாயை கொடுத்து வழிய சிக்கலை இழுத்து விட்டுகொண்டுள்ளார் மலையாள சினிமா இயக்குனரும் நடிகருமான ரூபேஷ் பீதாம்பரன். கடந்த வெள்ளியன்று நிவின்பாலி முதன்முறையாக நடித்துள்ள நேரடி தமிழ்ப்படமான 'ரிச்சி', கேரளாவிலும் வெளியானது. ஆனால் இரண்டு பக்கமும் இந்தப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பில்லை
இந்நிலையில்தான் மலையாள நடிகரும் இயக்குனருமான ரூபேஷ் பீதாம்பரன் படம் வெளியான அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் 'ரிச்சி'யின் ஒரிஜினலான கன்னடப்படமான 'உள்ளிடவரு கண்டந்தே' படத்தை பற்றியும் அதில் ஹீரோவாக நடித்திருந்த ரக்சித் ஷெட்டி எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார் என்பதையும் புகழ்ந்து தள்ளியிருந்தார். ரசிகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வலுக்கவே பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
ஆனால், அவரது செயல் தங்களது 'ரிச்சி' படத்தை மட்டம் தட்டுவதாகவும், ரசிகர்கள் மத்தியில் படம் சரியில்லை என மறைமுகமாக குறைசொல்லி, படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் விதமாக இருப்பதாகவும் 'ரிச்சி' பட தயாரிப்பாளர்கள், ரூபேஷ் பீதாம்பரன் மீது புகார் அளித்துள்ளார்களாம்.