ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச.,10) சென்னையில் நடைபெற்று வருகிறது. நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்து வரும் இக்கூட்டத்தில் பிரகாஷ் ராஜ், ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே மைக்கள் உள்ளிட்டவற்றை பிடுங்கி சேரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். விஷால், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பொதுக்கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ரகளை காரணமாக நேரம் குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியே வந்த சேரன் தரப்பு தயாரிப்பாளர்கள் விஷாலை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
முன்னதாக கூட்டம் துவங்குவதற்கு முன், சேரன் தரப்பினர் விஷாலுக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தனர்.