இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிதாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை விஷால் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது... ஆர்கே நகர் இடைதேர்தலில் எனது மனு பரிசீலனையின் போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன். நான் தேர்தலில் நிற்கிறேனோ இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்கே நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும், ஆர்கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.